சிறந்த நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுரைகள் எழுதிப் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றுள்ள நாடறிந்த எழுத்தாளர் ஆர்.எஸ். ஜேக்கப் அவர்கள் நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு விழாவில் சொற்பொறிவாற்றுவதற்குத் தயாரித்த அவர்தம் கருத்துக்களைத் தொகுத்து வெளியிடப்பட்டதே தற்போது உங்கள் கரங்களில் தவழும் இச்சிறுநூல். ஜேக்கப் அவர்கள், தான் ஏற்றுக்கொண்ட ஆசிரியப் பணியில் முழு ஈடுபாடு, சமுதாய மேன்மை குறித்த அக்கறை, மாணவர் நலனில் தனிக்கவனம், இன, குல வேறுபாடுகளை களைவதில் நாட்டம், சமயப்பற்று, இலக்கியம் படைப்பதில் ஆர்வம் போன்றவை குறித்து அறிந்துகொள்ளத் துணையாய் அமைந்துள்ளது இந்நூல் .