book

பேராசிரியர் கா.மீ. ஆராய்ச்சித் தடங்கள்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :244
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788123419930
Add to Cart

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி எம் சிந்தனைகளையும் இதயங்களையும் கவர்ந்தவர். 79வது வயதில் அவரது மரணம் எமது சிந்தனைகளை மழுப்பி கண்களை குலமாக்கியது. மாத காலங்கள் உருண்டோடிவிட்டன. அப்போதிருந்த துயரப் பழு இப்போதில்லை. இன்று பேராசியரின எழுத்துக்களையும் சமூக பங்களிப்பினையும் பின்னோக்கி பார்க்ககும் போது தமிழ் சமுதாயத்தின் வாழ்க்கைக் கூறுகளில் அவரது பார்வை பாயாத இடம் ஏதுவுமே இல்லை என்றுக் கூறும் அளவுக்கு அரசியல், பொருளியல், சமூகவியல், அழகியல், மெய்யியல், அரங்கியல் அறியல் என அவரது பார்வை வேர்கொண்டு கிளை பரப்பி விசாலித்து நிற்கின்றது. அத்தகைய அறிஞரின் இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும். ஆனால் பேராசிரியரின் இறப்புக்கு பின்னர் எதிர்பார்த்த வகையில் அவர் பற்றிய ஆக்கப்பூர்வமான ஆய்வுகள், மதிப்பீடுகள், நினைவுக் குறிப்புகள், அறிமுககக் குறிப்புகள் யாவும் வரவில்லை என்ற போதிலும் அவர் பொறுத்து சில கட்டுரைகள் உரைகள் கறிப்பிடத்தக்கனவாக உள்ளன. இதுவரை வெளிவந்த மதிப்பீடுகளை ஒப்புநோக்குகின்ற போது, போரசிரியரை குறுகிய வரம்புக்குள் நிலை நிறுத்தி தத்தம் வக்கிர நோக்குகளை அவர் மீது சுமத்த முற்படுகின்றவர்களை மேதாவிகளை ஒருப்புறத்தில் பார்க்கின்றோம்.