book

தஞ்சை வாணன் கோவை - மூலமும் தெளிவுரை

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர். கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

உலகில் தோன்றிய எல்லாம் இன்பமாக வாழவே விரும்புகின்றன.  ஒவ்வோர் உயிரும் அதற்கேற்ப வாழ்க்கை போராட்டங்களை அமைத்துக் கொள்கின்றன.  இன்பமே நிலைக்களன் என்பதால் அதனைச் சுற்றிய வாழ்க்கை வட்டம் அமைகிறது.  இன்ப நிலைகளின் அடிப்படையே காதல் என்பது.  காதல் இன்பம் கடையிலா இன்பம்.  இஃது ஆண் - பெண் இடையிலான அன்பின் முகிழ்ப்பு.  ஆண்மையும் பெண்மையும் முதிர்வை நோக்கி முன்னேறும் தடத்தின் முதல் படியே காதல் அது மனமாகிய வயலில் முளைத்து கிளர்ந்து தழைத்துப் படர்ந்து வாழும் பான்மையது.  அதனை விளக்கும் வகையில் அமைவனவே கோவை நூல்கள்.