மேலை நாட்டு மேடை நாடகம்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2002
Out of StockAdd to Alert List
நாடகக்கலை பற்றிச் சிந்தித்த அறிஞர்களின் கருத்துக்களின் அடிப்படையில் நாடகக் கலையில் இன்று ஏற்பட்டுள்ள படைப்பு நிலைத் தன்மைகளைக் காணலாம். நாடகங்கள் மேடையில் நடத்தப்படுவதற்காக எழுதப்படுகின்றன. அது மட்டுமன்றிப் படிப்பதற்காகவும் எழுதப்படுகின்றன. கேட்கும் நாடகங்களாக வானொலிக்கும் எழுதப்படுகின்றன. எப்படியாயினும் நாடகம் மேடையில் நடிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். தனியாகப் படிப்பவரும் வானொலியில் கேட்பவரும் தம் மனமேடையில் நாடக நிகழ்வுகளைக் கற்பனையில் காண்பார்கள். எழுதப்படுகிற நாடகம் மேடையில் உடலசைவுகள், வசனம், காட்சி, அமைப்பு, ஒப்பனை, ஒலிகள் ஆகியவற்றைக் கொண்டு நடிகர்களால் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. உடலசைவின் மூலம் பாத்திரங்களை, நடிகர் படைத்துக்காட்டுவார்கள். குரல் ஏற்ற இறக்கங்களின் மூலம் நிகழ்ச்சிக்கு வலுவும் அர்த்தமும் தருவார்கள். மேடையமைப்பின் மூலம் இடம், காலம், சூழ்நிலை ஆகியன படைத்துக் காட்டப்படும். வசனம், ஒலி ஆகியவற்றின் மூலம் கருத்து உணர்வெழுச்சி தரும் காலத்தை உணர்த்தும் சூழல்களும் காட்டப்படும். எழுத்தில் இல்லாத பலவற்றை நடிப்பில் காட்ட முடியும் என்பதால், நாடகத்தைப் படிப்பவரை விட, நேரில் பார்ப்பவர் நாடகத்தில் ஒன்றிவிட முடியும். இதை நீங்கள் அனுபவப்பூர்வமாக அறிந்திருக்கலாம்.