அடிப்படையில் ஆராயும்போது கோவில் நிர்வாகத்தில் பங்குபெற்ற உயர்சாதியினர்தான் மொத்தத் தமிழ்ச்சாதிகளையும் கோவிலின் பெயரால் ஆண்டுவந்தனர் என்பதும் தெளிவாகின்றது. ஆகவே கோவிலுக்கும் நில உடைமைக்கும் அவற்றை நிர்வகித்த சாதிகளுக்கும் இடையே உள்ள உறவுகளை ஆராய்வதன் மூலம்தான் தமிழக வரலாற்றை விளக்க முடியும். அந்தப் பணியை இந்நூலின் மூலம் தொடங்கி வைத்துள்ளார்.