எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளிவரலாம். பிரபஞ்சம் முடியுமிடத்தில் எனது கவிதை தொடங்குகிறது; ஆனால் பூமி தொடங்குமிடத்தில் முடிகிறது.