சக்திதரும் மந்திரங்களும் வெற்றிதரும் யந்திரங்களும்
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.தம்மண்ணசெட்டியார்
பதிப்பகம் :மலையரசி பதிப்பகம்
Publisher :Malaiyarasi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :3
Published on :2009
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம், தவம், ஞானம்
Out of StockAdd to Alert List
மந்திரம் என்பது நினைப்பவர்களைக் காப்பாற்றக்கூடியது. மந் - நினைத்தல், அறிதல், திரம் - காத்தல் என்பதால் மனதால் வாக்கால் செபித்து உச்சரித்து நமக்கு வேண்டியவைகளை உபாசனையில் பெறலாம். இறைவனின் வடிவு மூன்று என்றும் அவைகள் தூலம்,சூக்கும்ம் , அதிசூக்குமம் என்றும் அவைகளில் தூலவடிவம் மந்திரங்கள் என்றும், சூக்கும் வடிவம் உயிர்க்கு உயிராய் இருத்தல் என்றும், அதிசூக்கும் வடிவம் உண்மையறிவானந்தமயமான சிற்சக்தி வடிவு என்றும் கூறுவர். மந்திரம் என்பது எல்லாவற்றையும் அறிதலையும் உயிர்களுக்கு அருள் புரிதலையும் செய்வது நினைப்பவனைக் காப்பதும் ஆகும்.எப்போதும் நல்லதையே நினை. நல்லதையே செய். நல்லதையேபார் என சான்றோர்கள் கூறிவருகிறார்கள்.வினையை விதைப்பவன் வினையை அறுப்பான். தினையை விதைத்தவன் தினையை அறுப்பான் என்ற பழமொழி கேள்விப்பட்டிருப்பீர்கள்.