தமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா .வானமாமலை
பதிப்பகம் :அலைகள் வெளியீட்டகம்
Publisher :Alaigal Veliyeetagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :64
பதிப்பு :
Published on :2008
ISBN :1
குறிச்சொற்கள் :பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்
Out of StockAdd to Alert List
'சாதி இரண்டொழிய வேறில்லை' என்றார் ஔவையார்.அதிலும் இட்டார் பெரியோர் - இடாதோர் இழிகுலத்தோர், என்றார். இழி குலம் என்பதை இழிந்த சாதி என்று கொள்ளலாம். இவ்விழிந்த சாதி என்ற கருத்தியல் சங்க இலக்கியத்தில் காணப்படவில்லை. சக்ங கால சமுதாயம் தொழில் நிலை குடிகளாகப் பிரிந்திருந்ததே ஒழிய இன்றுள்ளதுபோல் சாதிப் பிரிவுகளாக இல்லை. பொருளாதாரச் சுரண்டலுக்குத் தீர்வாக சாதியடையாளங்கள் முன்வைக்கப்பட்டன. சாதி மேல்நிலையாக்கமானது பொருளாதார உயர்வுடன் தொடர்புடையது என்ற கருத்தே மக்களிடம் இருந்தது. சமூகம் சாதிகளாகப் பிரிந்துள்ளது போல் வர்க்கமாகவும் பிரிந்துள்ளது. இதனால் தான் சாதி ஒழிப்பு பேசியோர் கருத்துக்கள் காலப்போக்கில் எடுபடாமல் போயின. சித்தர்கள், வள்ளலார், பாரதியார், பாரதிதாசன் முதலானோர் சாதியம் பற்றி பேசியக் கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட நிலையோடு நின்று விட்டதை இங்கு சான்றாக்க் கொள்ளலாம்.