book

கந்தர் அனுபூதி விளக்கம்

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. பழநிசாமி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனை பதம் பணிவாம்.

ஓதுவார், கேட்பாருடைய இளகிடாத கடினமான கல்லாகிய நெஞ்சமும், கரைந்து உருகுமாறு, "முருகா நீயே எனக்குப் புகலிடம், வேறு புகலிடம் எமக்கேது?" என்று சரணாகதியாகிடும்போது, அருள்புரியும் ஆறுமுகப் பெருமானுக்கு, இயற்றமிழில் செம்மைப்பொருந்திய சொற்களைக்கொண்டுள்ள பாமாலையான இக்கந்தரநுபூதி நூலானது சிறப்படைய வேண்டி, ஐந்து திருக்கரங்களையும் யானை முகத்தினையும் கொண்ட விநாயகப் பெருமானின் இரு திருவடிகளையும் நாம் வணங்கிப் பணிந்திடுவோம்.

பாடல் மற்றும் அதற்குரிய விளக்கத்துடன் கந்தரநுபூதி என்ற இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது..வாங்கிப் படித்து பக்தியும், பரவசமும் அடையுங்கள்..