book

புருவை சிறுகதைகள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரு. மருத்துரை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123418159
குறிச்சொற்கள் :பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
Add to Cart

மனிதனை பெரிதுபடுத்தித் தருவது எழுத்தாளனின் உரிமை கடமை என்று நான் கருதுகிறேன். தனிமனிதனைச் சித்திரிக்கும் போது எழுத்தாளன் தன் எழுத்து ஊடுபாவு இழைகளுக்குள் அந்தத் தனிமனிதனின் சமூகக் குணங்களை - நல்லதையும் கெட்டதையும் சேர்த்து ஒருங்கே நெய்துவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். 'தனியான மனிதனை' மட்டும் எழுத்தாளன் சித்திரிக்க முற்பட்டால் புதுப்புனைவு தேவையே இல்லை.'' இந்த வாசகம்  மனிதகுலத்தின் மாபெரும் கதை சொல்லியான மாக்சிம் கார்க்கியுடையது.

கார்க்கி மனிதனை. அவன் சமூகக் கோலத்துடன் படைப்பதற்குக் கட்டளையிட்டார். எழுத்தாளன் தன் சக மனிதர்களைத் தெரிந்திருப்பதோடு. மனிதவியல் புலங்களின் வழி தன் சமூகத்தையும் புரிந்துகொண்டிருப்பது அவசியம்.