மருத்துவச் சாட்சியம்
Maruthuva Satchiyam
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
Publisher :Tamarai publications (p) ltd
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :84
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :வழக்கு, டிப்ஸ், நீதி
Out of StockAdd to Alert List
மருத்துவமனை திறப்பு விழாவிற்குச் சென்ற மகாத்மாகாந்தி இந்த மருத்துவமனையைச் சீக்கிரம் மூடுகின்ற அளவில் மக்கள் நோயற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பேசினாராம். அதைப்போல் வழக்குமன்றங்கள் மக்களுக்குத் தேவையானதாக இருந்தாலும் ஒவ்வொரு தனி மனிதனும் நேர்வழியிலும், நல்வழியிலும், நேர்மையாகவும் நாணயமாகவும் இருந்தால் வழக்குமன்றங்கள் தேவையற்ற, வளமான சமுதாயம் தோன்றும்.
போலி மருத்துவர்களும், பொய்ச் சாட்சியங்களும் இல்லாமல் போகவேண்டும். குற்றவியல் வழக்குகளில் ஒரு சாட்சியும் மருத்துவரும் சாட்சி சொன்னால் தண்டனை அளிப்பது உறுதியாகிவிடுகிறது. மருத்துவச் சாட்சிகளின் முக்கியத்துவத்தை அறியச் சொய்யும் வகையில் இந்நூல் புகழ்பெற்ற வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்களால் எழுதப்பெற்றுள்ளது.
- பதிப்பகத்தார்.