நவீன ஓவியம்
₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :
Out of StockAdd to Alert List
நவீன ஓவியக்கலை வளர்ச்சியில் முற்றிலும் புதிதான ஒரு பிராந்தியத்தைக் கண்டடைந்த மகத்தான கலை எழுச்சி வடிவம், அரூப ஓவியம். ஃபாவிஸ ஹென்றி மத்தீஸ் வண்ணத்திலும், க்யூபிஸ பிகாஸோ வடிவத்திலும் நிகழ்த்திய பாய்ச்சல்கள், நவீன ஓவியக்கலை மரபில், அதன் பிராந்தியத்தில், சில புதிய திறப்புகளாக அமைந்தபோதிலும், வாஸ்ஸிலி காண்டின்ஸ்கியின் அரூப வெளிப்பாடுகள் நவீன ஓவியக்கலைவெளியில் ஒரு புதிய பிராந்தியத்தைக் கண்டடைந்தன. அதே சமயம், அரூப ஓவியத்தின் முன்னோடிகள் என மத்தீஸையும் பிகாஸோவையும் காண்டின்ஸ்கி போற்றினார். “மத்தீஸ் – வண்ணம், பிகாஸோ – வடிவம். ஒரு மகத்தான குறிக்கோளின் இரண்டு இலக்குகள்” என்று காண்டின்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார். 1905-ல் படைக்கப்பட்ட மத்தீஸின் ‘தொப்பியணிந்த இளம்பெண்’ ஓவியம் (மத்தீஸின் மனைவி அமேலியின் உருவப் படைப்பு) வண்ணத்தில் பிரத்யேக உணர்வுகளை அரூபக் குணத்துடன் வசப்படுத்தியது. பிகாஸோவின் ‘அவிக்நோன் இளம் பெண்கள்’ வடிவத்தில் பகுப்புரீதியான அணுகுமுறையின் மூலம் உருவங்களை அரூப குணத்துடன் வெளிப்படுத்தியது