book

ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்

Aarokyam tharum Arputha Saarugal

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :4
Published on :2008
குறிச்சொற்கள் :சாறுள்ள பழங்கள், நீருள்ள காய்கள், ஆரோக்கியம்
Add to Cart

எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புதுமை என்ற மாயையாலும், இன்று பெருகி துரித ணவுகள், பதப்படுத்தப்ட்ட உணவுகள் புதுவிதமான உணவுகள்  நம் கண்முன்னே நடனம் புரிகின்றன. இவை எல்லாம் எவ்வளவு காலத்திற்கு?  எத்தனை  நாளைக்கு ? இறுதியில் இயல்பான எளிய இயற்கை உணவுகளே நம்மை கடைத்தேற்றச் செய்யக்கூடியவை ஆகும். எளிய இயற்கை உணவுகளுள் சாறுகளும் அடங்கும். சாறுள்ள பழங்கள், நீருள்ள காய்களும், உயர்ந்த உணவுகளாகும். சாறும் ,நீறும் நமக்குத் தேவையே. சாறுகளை அளவோடும் முறையோடும், உண்ணும்போது அவை அளவற்ற பயன்களை அளிக்கின்றன. ஆரோக்கிய வாழ்வுக்கு இந்த சாறுகள் உணவுகளும், நீருள்ள உணவுகளும் அமிர்தத்திற்கு ஒப்பானவை. இந்த அருமையான கையேட்டில், உயிர் காக்கும் உணவுச் சாறுகள்  குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளன. இந்த உணவுச் சாறுகளை தயாரிப்பது மிகவும் எளிது. பயனோ  மிகவும் உயர்ந்தது. புலனுர்ச்சியும், போக உணர்வுகளும் பெருகி வரும் இக்காலத்தில், இவற்றால் உருவாக்க் கூடிய பாதிப்புகளை, இயற்கையான எளிய உணவுகள் மூலமே போக்கிக் கொள்ள முடியும். வேறு வழியில்லை. இயற்கையைத் தஞ்சமடைவதுதான் இறுதி வழி.

                                                                                                                                                   - பதிப்பகத்தார்.