book

ஆய்வுக்கூடப் பரிசோதனையின் போது தவிர்க்க வேண்டிய ஆங்கில மருந்துகள்

Thavirka Vendiya Aangila Marunthugal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.எஸ். முத்துச்செல்லக்குமார்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :2
Published on :2006
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள், ஆரோக்கியம்
Add to Cart

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்வு அமைய வேண்டும். அவ்வாறு அது அமைந்தால்தான் அவன் வாழ்வில்  தனது கடமைகளை சரிவரச் செய்து முன்னேறமுடியும். ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் ஆதாரமாக ஆணிவேராக அமைவது அவனுடைய ஆரோக்கியம் தான். ஆகவே, ஆரோக்கியத்தைக் காக்க ,ஒவ்வொருவரும் தங்களது உடல்நலனைக் குறித்துத்  தெரிந்து கொள்வது அவசியம். தங்களது உடல்நலனை  அறிய இவர்கள் டாக்டரிடம் சென்று ஆலோசனை பெற  வேண்டும். உடலில் தோன்றும் எல்லா நோய்களுக்கும்  உடனடியாக நோய் அறிகுறிகள் தொந்தரவுகள் தோன்றி விடுவதில்லை. ஆரம்ப நிலையிலுள்ள பல நோய்கள் அறிகுறிகள் இல்லாமல் கூட இருக்கலாம். எனவே,மருத்துவ  பரிசோதனைகள், ஆய்வுக்கூடப்பருசோதனைகள் செய்யும் போது அறிகுறிகள் தோன்றாமலிருக்கும் பல ஆரம்ப நோய்களையும் கண்டுபிடித்து விடலாம். இந்த நூல் ஆய்வுக்கூடப்பரிசோனைக்கு செல்கின்ற அனைவருக்கும் வழிகாட்டும் நூலாக இருக்குமென கருதுகிறேன். இந்த நூலை வெளியிட்டவர்களுக்கும், அச்சிட்டவர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது நன்றிகள்.

                                                                                                                                        -  முத்துச் செல்லக்குமார்.