வாழ்க்கை நலங்கள் (திருக்குறள் சுய முன்னேற்ற நூல்)
Vaazhkai Nalangal (Thirukural Suay Munetra Nool)
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr. சிவசூரியன் I.A.S.
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2004
குறிச்சொற்கள் :பழந்தமிழ்பாடல்கள், தமிழ்காப்பியம், சங்ககாலம், மூலநூல்
Out of StockAdd to Alert List
நலமாக வாழ வேண்டும் என்பது தான் மண்ணுலகில் வாழும் மாந்தர் அனைவருக்கும் உள்ள வேற்றுமையில்லாத ஓரே ஆசை.
மொழியால், மதத்தால் , இனத்தால், சமயத்தால், நாட்டால் இன்ன பலவற்றால் வேற்றுமைகள் மலிந்த மண்ணுலகில் மக்கள்
எல்லோருக்கும் நலமாக வாழவேண்டும் என்ற விருப்பமே, நோக்கமே மேலோங்கி நிற்கிறது. நலமாக வாழ்வது எப்படி? முன்னேற்றம் பெற வழிகள் வெற்றிக்கு வாழ்கள் வியாபாரத்தில் விருத்தியடைய வழிகள் செல்வம் பெற எளிய வழிகள் பிரச்சினைக்ளுக்குத்தீர்வு கலக்கமடையாதே ' கவலைப்படாதே' இவையெல்லாம் அண்மைக்காலகட்டத்தில் அதிகமாக விற்பனையாகும் நூல்களின் தலைப்புகளில் சில இவை போதோதென்று 'மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்' ஸ்ட்லஸ் குறைக்கவழிகள்' என்று கவரச்சிகரமான ஆங்கிலத் தலைப்புகளில் அழகழகான நூல்களே அதிக விற்பனையில் உள்ளன.
வளம் நலத்திற்கு அடித்தளம் எனினும் தற்காலத்தில் வளமுடையோர் அனைவரும் தலமுடையோர் என்று கூற முடியவில்லை. பலவகை வளங்கள் - வசதிகள் பெற்று, செல்வமும் செல்வாக்கும் மிகுந்த பிரபலங்களின் அந்தரங்க இல்லற வாழ்க்கை அவலமாக உள்ளது. அவர்கள் அமைதியற்று அல்லும் பகலும் அல்லலுறுவதை அன்றாடம் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அகிலத்தில் அமைதியாக, நிறைவாக, நலமாக வாழ வழிதான் என்ன? நமக்கு நன்மை நல்கி, நன்னெறி செலுத்தி மகிழ்விக்கும் நலங்கள் யாவை? என்பதைச் சுருக்கமாக விளக்குவதே இச்சிறு நூலின் நோக்கம்.
அ. சிவசூரியன்.
மொழியால், மதத்தால் , இனத்தால், சமயத்தால், நாட்டால் இன்ன பலவற்றால் வேற்றுமைகள் மலிந்த மண்ணுலகில் மக்கள்
எல்லோருக்கும் நலமாக வாழவேண்டும் என்ற விருப்பமே, நோக்கமே மேலோங்கி நிற்கிறது. நலமாக வாழ்வது எப்படி? முன்னேற்றம் பெற வழிகள் வெற்றிக்கு வாழ்கள் வியாபாரத்தில் விருத்தியடைய வழிகள் செல்வம் பெற எளிய வழிகள் பிரச்சினைக்ளுக்குத்தீர்வு கலக்கமடையாதே ' கவலைப்படாதே' இவையெல்லாம் அண்மைக்காலகட்டத்தில் அதிகமாக விற்பனையாகும் நூல்களின் தலைப்புகளில் சில இவை போதோதென்று 'மனமே ரிலாக்ஸ் ப்ளீஸ்' ஸ்ட்லஸ் குறைக்கவழிகள்' என்று கவரச்சிகரமான ஆங்கிலத் தலைப்புகளில் அழகழகான நூல்களே அதிக விற்பனையில் உள்ளன.
வளம் நலத்திற்கு அடித்தளம் எனினும் தற்காலத்தில் வளமுடையோர் அனைவரும் தலமுடையோர் என்று கூற முடியவில்லை. பலவகை வளங்கள் - வசதிகள் பெற்று, செல்வமும் செல்வாக்கும் மிகுந்த பிரபலங்களின் அந்தரங்க இல்லற வாழ்க்கை அவலமாக உள்ளது. அவர்கள் அமைதியற்று அல்லும் பகலும் அல்லலுறுவதை அன்றாடம் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. அகிலத்தில் அமைதியாக, நிறைவாக, நலமாக வாழ வழிதான் என்ன? நமக்கு நன்மை நல்கி, நன்னெறி செலுத்தி மகிழ்விக்கும் நலங்கள் யாவை? என்பதைச் சுருக்கமாக விளக்குவதே இச்சிறு நூலின் நோக்கம்.
அ. சிவசூரியன்.