அனுபவ மலரின் அற்புதத் தேன் துளிகள்
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எம். ராஜகோபாலன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :தத்துவம்
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
இயற்கையான ஒளி நாளும் வளருகின்ற விளக்கு ஆனவனே!
என்றும் அழிதல் இல்லாத ஒப்பற்ற பொருளே! உயிரினது அறிவைக் கடந்த ஒப்பற்ற ஞான
வடிவினனே! தூய்மை மிக்க பளிங்கின் குவியலாகிய அழகிய மலையே! அடியவர்
உள்ளத்தில் இனிமைதரும் தேனே! பொதுவான எல்லையைக் கடந்து இறைவனிடம் ஈடுபட்டு
இருக்கும் உள்ளத்தில் பேரின்பம் நல்கும் கனியாக உள்ளவனே! பொன்னம்பலத்தைத்
தன் கூத்தினை நிகழ்த்தும் அரங்கமாகக் கொண்டு அடியவருடைய காட்சிக்குப்
புலனாகும் அருள் நடனத்தை விரும்பி நிகழ்த்தும் உன்னை, உன் தொண்டனாகிய நான்
புகழுமாறு நீ திருஉள்ளம்பற்றிச் செயற்படுவாயாக