book

பணம் குவிக்கும் கலை

Panam Kuvikkum Kalai

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரத்தின சக்திவேல்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2006
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம், தன்னம்பிக்கை, வர்த்தகம்
Out of Stock
Add to Alert List

 பல பத்திரிக்கைகள், பல மீடியாக்கள், பலவர்த்தகங்கள், பல மக்களிடையே தற்காலத்தில் விரும்பி அறியப்படும்,
விவாதிக்கப்படும் செய்தியாக பங்கு சந்தை மிகவும் பிரபலமாகி உள்ளது. இது ஓருமாய உலகமாகிறது. சினிமாவுக்கு அடுத்தபடியாக இதில் கவர்ச்சி அதிகம்.பல கோடிப்பணம் புரள்கிறது - கைமாறுகிறது. பலரின் பணம் மாயமாய் மறைகிறது - குறைகிறது. பலர் குறுகிய காலத்திலேயே  பணத்தை அள்ளுகின்றனர் எனலாம். பலர் இதைக் குதிரைப் பந்தயம், சூதாட்டம் , மாயவலை, தவறான வர்த்தகம் என  விமர்சனம் செய்கின்றனர் . இதில் சிக்கியவர்கள் வெளிவர விரும்புவதில்லை. ஆனால் அரசுகள் பங்குச் சந்தையை நாட்டின் பொருளாநாரச் சீர்திருத்தத்தை முன்னிட்டு அங்கீகரித்து அதை செம்மையாக நடத்த முயன்று வருகிறது. அதில்  பல தவறான  விஷயங்களும் நடந்து வருகின்றன. சிறப்படையும் விடியலுக்காக பங்குச் சந்தை காத்திருக்கிறது எனலாம். பங்குச் சந்தையைப் பற்றி முழு விவரம் அறியும் முன்னே அதில் முழு வீச்சில் ஈடுபடுபவர்கள், வர்த்தகத்தில் நுழைபவர்கள் நம்மில் பலர் உள்ளனர். ஒவ்வொரு நொடியிலும் மிகப் பெரிய மாற்றங்களைத் தரும். கழுகுப் பார்வையாக, கண் கொத்திப் பாம்பாக, காத்திருக்கும் கொக்காக இயங்கும் அன்பர்களுக்கு பங்குச் சந்தை நல்ல பணம் பண்ணும் கலை எனலாம். அருமையான வாய்ப்பு, லாபகரமான தொழில்.

                                                                                                                                                     -பதிப்பகத்தார்.