book

யாசுமின் அக்கா

Yaasumin Akka

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரபஞ்சன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382648185
Add to Cart

  துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா? முடியும். மகத்தான ஞானிகள், துறவிகள் குடும்பத்துக்குள், குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள்.


    அபிமன்யு – உத்தரை இவர்களின் குழந்தை பரிட்சித்து, இறந்து பிறந்தது. கரிக்கட்டையாகப் பிறந்த பரிட்சித்து எப்படிப் பிழைக்க முடியும்? மனைவி, குடும்பத்தோடு வாழ்ந்தாலும், மனசில் கொஞ்சம்கூடக் காமம் இல்லாத மனிதன் எவனோ அவன் குழந்தையைத் தொட்டால் குழந்தை பிழைப்பான் என்கிறது விதி.


     ரிஷிகள் தொட்டார்கள், குழந்தை பிழைக்கவில்லை, முனிவர்கள், துறவிகள், ஞானிகள் எல்லோரும் தொட்டார்கள். குழந்தை அசையவில்லை. தாய் அலறுகிறாள், கிருஷ்ண்ன் ’நான் தொடலாமா’ என்கிறான். எல்லோரும் சிரிக்கிறார்கள். அவன் மனைவிகள் திகைக்கிறார்கள். கிருஷ்ணன் தொட்டான். குழந்தை பிழைத்துக்கொண்டது.