book

நூலகத் தந்தை அரங்கநாதன்

₹95+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப. பாலசுப்பிரமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :117
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430324
Add to Cart

இவர் நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகிலுள்ள வேதாந்தபுரம் என்னும் ஊரில் 1892 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் நாள் ராமாமிர்தம் சீத்தாலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பள்ளிக் கல்வியை சீர்காழியில் முடித்து சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் சைதாப்பேட்டையில் இருந்த ஆசிரியர் கல்லூரியில் ஆசிரியத் தகுதிச் சான்றிதழையும் பெற்றார். உயர்கல்வியை முடித்துவிட்டு மங்களூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்த அரசாங்கப் பள்ளிகளிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியிலும் கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்பித்து வந்தார். அதன் பிறகு சென்னை மாநிலக்கல்லூரியில் கணிதவியல் துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியர் தொழிலில் விருப்பம் இருந்தாலும் அவரது ஊதியம் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. 

தனது வருமானத்தை மேம்படுத்திக்கொள்ளும் நோக்கில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், நல்ல சம்பளத்துடன் கூடிய நூலகர் வேலைக்கு விண்ணப்பம் செய்தார். 1924ல் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் முதல் நூலகராக பணியில் சேர்ந்தார். ஊதியம் அதிகம் என்றாலும் கற்பித்தல் பணியில் கிடைத்த மன நிறைவு நூலகர் பணியில் இல்லை. அதனால் அப்பணி அவரைக் கவரவில்லை. எனினும் மாநிலக்கல்லூரி முதல்வரின் ஆலோசனைப்படி, லண்டன் சென்று, நூலக அறிவியலில் பல்வேறு நுணுக்கங்களைக் கற்றார். அங்கிருந்து நாடு திரும்பியதும், பல்கலைக்கழக நூலகத்தை சீரமைக்கத் தொடங்கினார். அதனை அடுத்து சென்னை நூலகச் சங்கத்தை நிறுவினார். இது நூலக இயக்கத்தின் சின்னமாக மாறியது. அதன் அமைப்புச் செயலாளராக 1928 முதல் 1945 வரை செயல்பட்டார்.