book

புனைகதையும் புதுக்கவிதையும்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. இளவரசு
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123420806
Add to Cart

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் தனித்தன்மை வாய்ந்த பன்முகப்படைப்பாற்றல் மிக்கவர் இளங்கோவன். திறமான புலமை கொண்டவர், திறம்பாத நெஞ்சம் கொண்டவர்; தீட்சண்யமான பார்வை உடையவர்; அபாரத்துணிச்சல் வாய்ந்தவர். சமரசங்களுக்கு உடன்படாதவர். உரத்த சிந்தனைகளை வீரியம் வாய்ந்த படைப்புகள் மூலம் வெளிப்படுத்துபவர்; எத்தனையோ இழப்புகளைச் சந்தித்தும் படைப்பு உலகில் தடம் பதித்த பன்முக ஆளுமை. தற்போது தமிழ் இலக்கியத்தைத் தலைமுழுகிவிட்டாலும் கூடச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வரலாற்றில் அவருக்கெனச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு. இளங்கோவனின் படைப்பு முயற்சிகள் பலவிதத் தடைகளை எதிர் கொண்டாலும் அவரது படைப்புகள் புதுமைத்தாகமுடைய இலக்கிய ஆர்வலர்களின் (தமிழ்க்குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என்ற டார்வினின் பரிணாமக்கொள்கைக்குத் தமிழ்ச் சாயம் பூசி மகிழும் உளுத்துப்போன பழம்பெருச்சாளிகள் அல்லர்) கவனத்தை ஈர்க்காமல் இல்லை. புனைகதை, கவிதை, நாடகம் எனப் பலவகை இலக்கியங்களைப் படைக்கும் இவர் ஆழ்ந்தகன்ற படிப்பறிவு உடையவர். சர்வதேச இலக்கியப் பரிச்சயம் நன்கு உடையவர்; ஆகவே இவரது சிந்தனைத்திறனின் வீச்சு கதிர்வீச்சுப் போன்று ஆற்றல் மிக்கது. நாடக இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தம் இயக்கத்தின் மூலம் கொடுத்துவரும் இளங்கோவனை ‘அக்கினிக்கூத்தின்' நாடக இயக்குநராக மட்டுமின்றி நாடகக்கலை நிபுணராகவே உலகம் நன்கறியும். ‘படைப்புப் பல' படைத்துவரும் இப்படைப்பிலக்கியவாதி மற்றவர்களின் படைப்புக்களைத் தமிழாக்கமும் செய்துவருகிறார். மேலும் இவர் சிறந்த ஆய்வாளர். இப்படி அபாரமான ஆற்றல்கள் பல கொண்ட இலக்கிய ஆளுமையின் கவிதைப் படைப்புக்களைப் (கவிதை நூல்கள்) பற்றியது இக்கட்டுரை.