book

தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. முருகேசபாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427263
Add to Cart

மலர், பூ என எப்படிச் சொன்னாலும் மனித மனதில் உற்சாகம் கொப்பளிக்கிறது. பாதை யோரத்தில் பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்கள் முதலாகப் பெயர் தெரியாத காட்டுப் பூக்கள் வரை எல்லாமே அழகுதான். ஈரம் ததும்புகின்ற பூக்கள், அழகிய வண்ணத்தில் ஒளிர்ந்திடும் பூக்கள், இனிய மணம் வீசும் பூக்கள்... பூக்களில் தான் எத்தனை வகைகள்? பூக்களை நேசிக்காத மனிதர்கள் புவியினில் இருக்கச் சாத்தியமுண்டா? தெரியவில்லை. கவர்ச்சியான தோற்றத்தில் நாகலிங்கப்பூ, நறுமணம் கமழும் செண்பகப்பூ, இளம்பெண்ணின் கைவிரல்கள் போன்ற காந்தன் மலர், மரக்கிளையில் மஞ்சள் வண்ணத்தில் சரம் சரமாகத் தொங்கும் சரக் கொன்றைப் பூ, தொட்டியில் ஒற்றையாகப் பூத்திருக்கும் ரோஜா... நம்மைச் சுற்றிலும் தான் எத்தனை விதமான பூக்கள்? தமிழர் வாழ்க்கையில் பூக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. பரந்துபட்ட நிலவெளியைப் பூக்களின் பெயரால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரால் அடை யாளப்படுத்திய பண்டைத் தமிழரின் ஆழ்மனத்தினுள் பூக்கள் தொன்மங்களாக உறைந்திருந்தன. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 பூக்களைப் பற்றி விவரிப்பது வெறுமனே தகவல் அல்ல. பூக்கள் மீதான தமிழரின் காதல் என்றுதான் அதைக் கருத வேண்டும்.