book

கீதாஞ்சலி

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :158
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123428390
Out of Stock
Add to Alert List

இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் எழுதிய கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali). வங்காள மொழியில் 157 பாடல்கள் கொண்ட இதன் மூலப் பதிப்பு ஆகஸ்ட் 14, 1910 அன்று வெளியிடப்பட்டது. கீதாஞ்சலியின் ஆங்கிலப் பதிப்பு 1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ’இந்திய சொசைடி ஆஃப் லண்டன்’ என்னும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. இது வங்கமொழியிலிருந்து தாகூராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட 103 பாடல்களைக் கொண்டிருந்தது. கீதாஞ்சலியின் வங்கமொழிப் பதிப்பிலிருந்து 53 பாடல்கள் மற்றும் அவரது பிற படைப்புகளிலிருந்து 50 பாடல்கள் என மொத்தம் 103 பாடல்களின் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலப் பதிப்பில் இடம்பெற்றன[1][2]. கீதாஞ்சலி உலகிலுள்ள பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. டபுள்யு. பீ. ஏட்ஸ் உட்பட பல கவிஞர்களும் விமர்சகர்களும் இந்நூலைப் பாராட்டியுள்ளார்கள். இந்நூல் தாகூருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசை (1913) இல் பெற்றுத் தந்தது. மேற்கத்தியர் அல்லாத ஒருவருக்கு நோபல்பரிசு வழங்கப்படுவது அதுவே முதல்முறையாகும்.