book

கள்வனின் காதலி

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கல்கி
பதிப்பகம் :ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
Publisher :Shri Senbaga Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :216
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

கதை தெரிந்திருக்கலாம். முத்தையன் ஹீரோ. ஏழை. ஒரே தங்கை அபிராமி. அவனுக்கும் கல்யாணிக்கும் காதல். காதல் கை கூடவில்லை. கல்யாணிக்கு ஒரு பெரியவரோடு திருமணம் ஆகிறது. முத்தையன் ஒரு மடத்தில் கணக்குப் பிள்ளை ஆகிறான். மடத்தின் இன் சார்ஜ் கார்வார் சங்குப் பிள்ளை அபிராமியோடு தவறாக நடக்க முயற்சிக்கிறான். முத்தையன் அவனை அடிக்கப் போக, பிள்ளை போலீசில் பொய்ப் புகார் கொடுத்து அவனை ஜெயிலில் தள்ளுகிறான். இன்ஸ்பெக்டர் சர்வோத்தம சாஸ்திரி உண்மை தெரிந்து முத்தையனை விடுவிப்பதற்குள் முத்தையன் ஜெயிலிலிருந்து தப்புகிறான். பிறகு திருடனாக மாறுகிறான். அபிராமியை சாஸ்திரி ஒரு பெண்கள் ஸ்தாபனத்தில் சேர்த்துவிடுகிறார். இதற்கிடையில் கல்யாணியின் கணவர் இறந்து போகிறார். இறப்பதற்கு முன் அவர் பொருந்தாத கல்யாணத்துக்காக மனம் வருந்தி கல்யாணியை இன்னொரு முறை திருமணம் செய்து கொள்ளும்படி சொல்கிறார். கல்யாணி முத்தையன் தன் வீட்டுக்கு திருட வரமாட்டானா, அவனை சந்திக்கமாட்டோமா என்று காத்திருக்கிறாள். முத்தையன் வருகிறான், அவர்கள் காதல் மீண்டும் துளிர்க்கிறது. அபிராமிக்கு ஒரு வழி காட்டிவிட்டு இருவரும் மலேயாவுக்கு போய்விடுவது என்று தீர்மானிக்கிறார்கள். முத்தையன் ஒரு நாடகக் கம்பெனியில் சேர்ந்து சென்னை செல்கிறான். அங்கேயும் அவனுக்கு கள்ளபார்ட் வேஷம்தான். இவனை தேடிக் கொண்டிருக்கும் சாஸ்திரி சந்தேகப்பட்டு அபிராமியையும் நாடகம் பார்க்க அழைத்துக்கொண்டு வருகிறார். முகமூடியை கள்ளபார்ட் அவிழ்க்கும்போது அபிராமி தன் அண்ணன் என்பது நிச்சயமாக தெரிந்து மயக்கமாகிறாள். ஆனால் முத்தையன் சாஸ்திரியிடமிருந்து தப்பிவிடுகிறான். கொள்ளிடம் காடுகளில் கல்யாணிக்கு மட்டும் தெரிந்த மாதிரி மறைந்திருக்கிறான். அவனுக்கு மலேயா டிக்கெட் வாங்கிக்கொண்டு அவன் நண்பனும் நாடகத்தில் ஸ்திரீபார்ட் வேஷம் போடுபவனும் ஆன கமலபதி பெண் வேஷத்தில் வருகிறான். கல்யாணி முத்தையனோடு ஒரு “பெண்ணை” பார்த்து சந்தேகப்பட்டு மூளை குழம்பி சாஸ்திரியிடமே முத்தையன் எங்கே என்று சொல்லிவிடுகிறாள். முத்தையன் சுடப்பட்டு இறக்கிறான்.