book

கிரிவலம்

Girivalam

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்திரசேகர சர்மா
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183683203
குறிச்சொற்கள் :அற்புதங்கள், திருவண்ணாமலை, கோயில்கள், வழிப்பாடு, நம்பிக்கை
Add to Cart

யோகிகளையும் மகான்களையும் மட்டுமல்ல... சாமான்ய மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமலை இது! இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான்.

பௌர்ணமி போன்ற விசேஷ காலங்களில்,பக்தகோடிகளின் முற்றுகையால் அண்ணாமலையே ஓர் அருள்வெள்ளமாக மிதக்கிறது.கிரிவலம் செய்தால், வாழ்வில் வளங்கள் பலவற்றைப் பெறலாம் என்பது பக்தகோடிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தினமுமே அண்ணாமலையை வலம் வரும் அன்பர்களும் இருக்கிறார்கள்.

கிரிவலச் சிறப்புகளையும், அண்ணாமலையானின் அற்புதங்களையும், அண்ணாமலையில் வாழ்ந்த மகான்களின் மகத்துவங்களையும் விவரிக்கிறது இந்நூல்.மொத்தத்தில், திருவண்ணாமலை கண்முன் ஜொலிக்கிறது.

கிரிவலம் ஒருமுறைகூட செல்லவில்லையே என்று வருத்தப்படுபவர்கள் இந்நூலைப் படித்தால்,உடனே புறப்பட வேண்டும் என்ற உந்துதலைப் பெறுவது நிச்சயம்!