book

நெருப்பைத் தீண்டிய தென்றல்

Neruppaith Theendiya Thenral

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உஷாராணி
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

தெரியாமலாலும் அறியாமையாலும் செய்யும் செயல் வாழ்வில் எந்த மோசமான நிலைக்கு வேண்டுமானாலும் தள்ளிவிடும்.

பணக்காரியான அறியா பெண்ணான வினயாவை நண்பர்கள் உசுப்பேத்திய காரணத்தால் காதல் என்று நாடகமாடி அவளை வீட்டை விட்டு வெளியேற செய்து கல்யாணம் செய்வதாக ஆசை காட்டி கற்பையும் இழக்க வைக்கிறான் நௌதின்.

தவறான பெண்ணாக வினயாவை நினைப்பவனிடம் பேசி பலன் இல்லை என்று டிரையினில் தற்கொலை செய்து கொள்ள முற்படும் போது செல்வராஜ் காப்பாற்றித் தன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.. ஆனால் அவரின் மனைவி வேலை வாங்கியே கொடுமை படுத்தியதையும் தன் நிலை கருதி அமைதியாக இருப்பவளுக்கு நௌதின் தான் அவர்களின் மகன் என்று தெரியும் போது வெறுத்துப் போகிறது.

பல கொடுமைகள் செய்து அதன் பிறகும் அவள் அவனை மதிக்காமல் இருப்பதால் கட்டாயப்படுத்திக் கல்யாணமும் செய்து கொள்கிறான். வெட்கம் கெட்ட மனது இவனைத் திரும்பவும் காதலனாகவே நினைப்பதால் அவனிடம் சரணடைகிறாள். அவன் திருந்தி தான் இப்பொழுது அவளை உண்மையாகக் காதலிப்பதாகச் சொல்கிறான்.

தன் தேவைகள் தீர்ந்த பின்பும் தன் மேல் காதல் கொண்டவளை எப்படி வேணாலும் அசிங்கப்படுத்திப் பிறகு சாவகாசமாக மனம் திருந்தலாம் என்று சொல்லும் கதை.