-
உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் செய்வது என்பது மற்ற உயிரினங்களுக்கான வாழ்க்கை நியதி. ஆனால் மனித வாழ்க்கை அவற்றையும் கடந்து, அறிவார்ந்த நிலையில் சிந்தித்து, திட்டமிட்டு வாழ்வதாகும். அதற்கு நிறைய கஷ்டங்களையும், பிரச்னைகளையும் மனிதன், தன் வாழ்நாளில் சந்திக்க வேண்டியுள்ளது. அதில் வெற்றி பெற்றவனே சிறந்த வாழ்க்கையை அடைந்தவனாவான். அதற்கு வெறும் படிப்பறிவு மட்டும் போதாது, அனுபவரீதியாகக் கிட்டும் பட்டறிவும் வேண்டும். அதை நமக்கு முன்வாழ்ந்தவர்கள் குறிப்புகளாக விடுடச் சென்றுள்ளார்கள். அதில் சிலவற்றை இந்நூலாசிரியர் எளிய நடையில் இந்நூலில் தொகுத்தளித்துள்ளார். இவற்றில் சில நமக்கு ஏற்கெனவே அறிந்ததாகவும், பல புதியதாகவும் உள்ளன. குறிப்பாக, எரிவாயு சிக்கனத்திற்குத் தேவையான யோசனைகள் முதல், விலைவாசியை எப்படி சமாளிப்பது, உணவு பண்டங்களை பாதுகாப்பது எப்படி, எதைச் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும், குழந்தையின் அறிவுத் திறனை உயர்த்துவது எப்படி, பயணத்திற்குப் பயன்படும் குறிப்புகள், இல்லத்தை சுத்தமாக வைப்பதால் ஏற்படும் நன்மைகள், நல்ல பெயரைத் தட்டிச் செல்வது எப்படி என்பது வரை சுமார் 32 விஷயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. இவற்றை குடும்பத்தினர் தங்களுக்கு மட்டுமல்ல, இளைய தலைமுறையினருக்கும், வளரும் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுப்பது அவர்களின் எதிர்கால வாழ்க்கை எளிதாகவும் சிறப்பாகவும் அமைய உதவும். -பரக்கத். நன்றி: துக்ளக், 4/9/2013.
-
This book Arththamulla Vaazhkkai Vaazha Kurippugal is written by Sasimadhan and published by Kadalangudi Publications.
இந்த நூல் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள், சசிமதன் அவர்களால் எழுதி கடலங்குடி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Arththamulla Vaazhkkai Vaazha Kurippugal, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ முக்கியக் குறிப்புகள், சசிமதன், Sasimadhan, Pothu, பொது , Sasimadhan Pothu,சசிமதன் பொது,கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், Kadalangudi Publications, buy Sasimadhan books, buy Kadalangudi Publications books online, buy Arththamulla Vaazhkkai Vaazha Kurippugal tamil book.
|