book

உன்னை ஒன்று கேட்பேன்

Unnai Ondru Kaetpen

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :280
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

உன்னை ஒன்று கேட்பேன் - - - அதிகாலை! - பனி விலகாத சென்னை நகரம் சோம்பலாய் உறங்கிக் கொண்டிருந் தது. கொடைக்கானலில் இருக்கிறோமோ என்கிற சந்தேகம் யாருக்குமே எழுமளவிற்கு ரோடில் எதிர் 1 வரும் நபரை அடையாளம் காண முடியாதபடி பனி போர்த்தியிருந்தது. இன்னும் பரபரப்பை தொடாத மத்திய சிறைச்சாலை. நான்காம் செல்லில் தன் லத்தியால் கதவைத் தட்டி சப்தம் எழுப்பினார் கான்ஸ்டபிள். கையை தலைக்கு வைத்து, கால்களை குளிருக்கு நடுங்கி கங்காரு போல் குறுக்கிப் படுத்திருந்த நாகராஜன் சட்டென்று கண் விழித்தான். கதவுக்கு வெளியே மசமசப்பாய் தெரிந்த போலீஸ்காரரின் உருவம் மூளைக்கு உணர்த்த பட்டென்று எழுந்து ஓடி வந்தான்.