book

அறம் வளர்த்த ஆன்றோர்கள்

Aram Valarththa Aandrorgal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாஞ்சில் ஸ்ரீவிஷ்ணு
பதிப்பகம் :வீமன் பதிப்பகம்
Publisher :Veman Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

அழியாது இயங்குவது, உலகில் பண்புடைப் பெரியார்கள், நல்ல பல குணங்களான் நிறைந்த ஆன்றோர்கள், அவ்வப்போது தோன்றித் தோன்றி, மறம் அழித்து, அறம் வளர்த்து வந்தமையினாலேயே ஆகும்.

உலகியல் அழிவுறாவண்ணம், அரணாய் அமைந்து காக்கவல்ல அச்சான்றோர் யாவர்? அவர் பண்பு யாது? அவர்பால் காணலாம் அருங்குணங்கள் யாவை? இல்லிருந்து நல்லறமாற்றுதல், வருவிருந் தோம்பி வாழ்வதற்கேயாகும். விருந்தினர் வயிற்றுப் பசியால் வருந்தியிருக்க, வயிறார உண்பான் வாழ்க்கை வனப்புடையதாகாது. வளம் கெட்டு அழியும். ஆதலின், அவ்விருந்தினரை உண்பித்தன்றித் தாம் உண்டல் கூடாது. உண்ணும் உணவு கிடைத்தற்கு அரியதாய், ஒருவர்க்கே போதுமானதாயினும், அதையும், அவரோடு இருந்து பகிர்ந்துண்டலல்லது, தாமே தனித்துண்டல் தகாது. இந்தப் பண்பினைத் தலைமை சால் பண்பாகக் கொண்டு போற்றுவார் யாரோ அவரே பெருமையுடையவர்.