book

கேங்டாக்கில் வந்த கஷ்டம்

Gangtokil Vandha Kashtam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்யஜித் ரே
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183688192
குறிச்சொற்கள் :திரைப்படம், நிஜம், சிந்தனைக்கதைகள், முயற்சி
Out of Stock
Add to Alert List

உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. கலைப்பட இயக்குநராக நாமறிந்த ரேயின் முற்றிலும் மாறுபட்ட மற்றொரு பரிமாணம். இதில் துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து, பல புதிய சாத்தியங்களை உருவாக்குகிறார் சத்யஜித் ரே. இந்தக் கதைகளில் வெளிப்படும் அவருடைய எழுத்தின் வேகமும் சீற்றமும் பிரமிப்பூட்டக்கூடியவை.

1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய, ஃபெலுடா வீரசாகசக் கதைகள் வங்காளத்திலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா, வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என அழைக்கப்படுபவர். முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.

ஃபெலுடா வீரசாகசக் கதைகளில் ‘கேங்டாக்கில் வந்த கஷ்டம்’ ஐந்தாவது புத்தகம். கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக, இமயமலையின் கீழ்ப்பகுதியில் இருக்கும் கேங்டாக் செல்கிறார்கள் தபேஷும் ஃபெலுடாவும். விமானத்தில் அறிமுகமாகிறார் திரு. போஸ். மூவரும் கேங்டாக்கில் கால்வைக்கும் போது, போஸின் நண்பர் ஷெல்வான்கர் ஒரு விபத்தில் மரணமடைந்த செய்தி இவர்களுக்காகக் காத்திருக்கிறது. அது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா? ஃபெலுடா துப்பறியத் தொடங்குகிறார்.

என்னவாக இருக்கும் ஃபெலுடா துப்பறிதலின் முடிவு?