குதிரைகளின் கதை
Kuthiraigalin kathai
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா. ராகவன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788183680271
குறிச்சொற்கள் :சரித்திரம், தலைவர்கள், தீண்டாமை, சாதனை
Out of StockAdd to Alert List
காந்தியை எனக்குப் பிடிக்கும் . அவரை விமரிசிப்பதும், பிடிக்காது என்று சொல்லுவதும் ஒரு நாகரிகம் ஆகியிருக்கும் காலத்தில்
இந்த ஒருவரிக்கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். காந்தி ஓர் அரசியல்வாதி இல்லை. நிச்சயம் இல்லை. ஆனால் அவரை விடாப்பிடியாக அப்படியே பார்க்கப் பழகிவிட்ட மக்களுக்கு வேறு எந்தவிதத்திலும் சிந்தித்துப் பார்க்க முடியாமலாகி விட்டது. இது சந்தேகமில்லாமல் துரதிருஷ்டம் தான். அவர் ஒரு பரிபூரணமான சுயசிந்தனையாளர். பூமிக்கு மேலே, ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற அத்தனை விஷயங்கள் பற்றியும் ஆற அமர உட்கார்ந்து யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை கண்டடைந்ததை, துளியும் க்றைமிகையின்றி எழுத்திலும் பேச்சிலுமாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது கிராமராஜ்ஜியம், சுதேசிப் பொருளாதாரம் போன்ற பிரயோகங்கள் இன்றைக்குத் தேர்தல் உபகரணங்களாகியிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை காந்தி ஒரு பொதுச்சொத்து. யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்றாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு காந்தி ஜெயந்தி அல்லாத நாளில் கூட அவர் சிலையின் மீது படிந்து கிடக்கிற எச்சங்களைத்துடைத்துச் சுத்தப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆதனால் இவற்றை எழுதினேன்.
- பா ராகவன்.
இந்த ஒருவரிக்கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். காந்தி ஓர் அரசியல்வாதி இல்லை. நிச்சயம் இல்லை. ஆனால் அவரை விடாப்பிடியாக அப்படியே பார்க்கப் பழகிவிட்ட மக்களுக்கு வேறு எந்தவிதத்திலும் சிந்தித்துப் பார்க்க முடியாமலாகி விட்டது. இது சந்தேகமில்லாமல் துரதிருஷ்டம் தான். அவர் ஒரு பரிபூரணமான சுயசிந்தனையாளர். பூமிக்கு மேலே, ஆகாயத்துக்குக் கீழே இருக்கிற அத்தனை விஷயங்கள் பற்றியும் ஆற அமர உட்கார்ந்து யோசித்திருக்கிறார். தான் யோசித்ததை கண்டடைந்ததை, துளியும் க்றைமிகையின்றி எழுத்திலும் பேச்சிலுமாகப் பதிவு செய்திருக்கிறார். அவரது கிராமராஜ்ஜியம், சுதேசிப் பொருளாதாரம் போன்ற பிரயோகங்கள் இன்றைக்குத் தேர்தல் உபகரணங்களாகியிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை காந்தி ஒரு பொதுச்சொத்து. யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்றாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு காந்தி ஜெயந்தி அல்லாத நாளில் கூட அவர் சிலையின் மீது படிந்து கிடக்கிற எச்சங்களைத்துடைத்துச் சுத்தப்படுத்தலாம் என்று நினைத்தேன். ஆதனால் இவற்றை எழுதினேன்.
- பா ராகவன்.