book

மாண்புடைய மங்கையரும் பேரின்ப வாழ்வினரும்

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.முத்து . கண்ணன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :117
பதிப்பு :1
Add to Cart

அந்நாள் என்றது ஆபுத்திரன் சாலிவயிற்றிற் பிறந்தபோது அவள் அக்குழவியைத் தோன்றாத்துடவையிலிட்டுச் சென்ற நாளைச் சுட்டிகின்றது

தவளமால் வரை என்றது, தவளமலை என்னும் பெயருடைய மலை என்றவாறாம். இனி, பனிபடர்ந்து வெண்மையாக விளங்குமொரு பெரிய மலை என்பது பொருளாகக் கோடலுமாம். மாமுனி இவ் வயின் சென்றெய்த என்றாரேனும் அம்முனிவனுடைய  நல்லாவின் வயிற்றிற்பிறந்து என்பது கருத்தாகக் கொள்க. என்னை? பொன்னின் கோட்டது பொற் குளம்புடையதாய்ப் பிறர் தொழத்தோன்றி ஈனா முன்ன முலை சுரந்தூட்டலும் எனப் பாட்டிடை வைத்த குறிப்பாலே பசு வயிற்றுப் பிறந்து வளர்ந்து ஈனா முன்னமே பால் சுரந்தூட்டியது என்பது பெற்றாமன்றே