book

மழலைத் தென்றல்

Malalai Thendral

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோ.பெ. நாராயணசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :112
பதிப்பு :2
Published on :2005
ISBN :9788123408149
குறிச்சொற்கள் :சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
Add to Cart

இன்றைய உலகில் கருப்பையைத் தவிர அமைதியான இடம் எதுவும் இல்லை என்று சொல்லும் நிலைதான் உள்ளது. பெண்ணின் வயிற்றைவிட்டு வெளியில் வந்ததும் பிரச்சினைகளும் வந்து தொற்றிக் கொள்கின்றன. வீட்டுக்குள், தெருவில், ஊரில், நாட்டில், உலகத்தில் என்று பிரச்சினைகள் விரிந்துகொண்டே போகின்றன. ஊரெல்லாம் விஷவாயுவைப் பரவவிட்டு ஒரே ஒரு உறையில் பிராணவாயுவை வைத்துக்கொண்டு அதைச் சுவாசிக்கச் சொல்வதுபோல் கேடுகள் மலிந்துவிட்ட சமுதாயத்தில் நேர்மை, நீதியெல்லாம் நின்று நிலைக்கப்பெரும்பாடு பட வேண்டியுள்ளது. தென்றல் வீசி, தீமை என்ற விஷவாயுவிற்குள் சிக்கி மூச்சுச் திணறாதவண்ணம் அறிவூட்டுகிறார். மழலைத் தென்றல் என்ற இந்நூலில் சிறுவர்களின் நெஞ்சில் உயர்ந்த கருத்துக்களை விதைக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. சந்தங்களுடன் அமைந்த இப்பாடல்கள் சிறுவர்களுக்குச் சொல்லித்தர எளிதாக இருப்பதுடன் இனிமை பயக்கும் ஏற்றம் பெற்றவை. இந்நூலை வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம்.