வீரபாண்டியக் கட்டபொம்மன்
₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செந்துறைமுத்து
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :11
Out of StockAdd to Alert List
தமிழகம், வீரத்தின் விளைநிலம், இங்கு வாழையடி வாழையாக வீரப்
பெருமக்கள் பலர் தொன்றுதொட்டு இன்று வரை தோன்றி வருவது உலகறிந்த உண்மை .
அந்த வீரப் பெருமக்கள் வரிசையிலே பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மனும்
ஒருவனாவான்."கட்டபொம்மு” என்பது அவ்வீரனின் குடும்பப் பெயர். வீரபாண்டியன்
என்பதே, அவனுடைய பெற்றோரிட்ட இயற்பெயர். எனவே, அப்பெருமகனை 'வீரபாண்டியன்'
என்ற பெயராலேயே அழைப்போமாக.வீரபாண்டியன், பிறந்த நாட்டால் தமிழன்; பேசும்
மொழியால் தமிழன்; வாழ்க்கை நெறியாலும் தமிழன். என்றாலும், அவனுடைய
மூதாதையர் ஆந்திரரேயாவார். வடக்கே பெல்லாரி ஜில்லாவில் பஞ்சம் வாட்டியதன்
காரணமாக அங்கிருந்து வெளியேறி, தெற்கே திருநெல்வேலி ஜில்லாவில் சாலிகுளம்
என்னும் சிற்றூரில் குடியேறினார் பால்ராஜா எனும் ஆந்திரர். இவர் குடியேறிய
காலம், கி.பி. பதினோறாம் நூற்றாண்டு என்பர் வரலாற்று அறிஞர்கள்.