book

மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :352
பதிப்பு :10
Published on :2016
Add to Cart

இந்த நூல் மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள், முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.                                      
 
மட்டபல்லியில்தான் உலக நன்மையை முன்னிட்டு ஸ்ரீ முக்கூர் சுவாமிகளால் ஸ்ரீசுவாதி நட்சத்திர மகா நரசிம்ம மகா மந்திர ஜப ஹோம மகா யக்ஞங்கள் நடந்தன. ஸ்ரீசுவாமியின் தலைமையில் ரித்விக்குகள் மந்திரங்களை உச்சரிக்க, யக்ஞத்தில் 32 விதமான பட்சணங்கள் உட்பட பல பொருள்கள் சமர்ப்பிக்கப்படும். இந்த பட்சணங்கள் கல்யாண சீர் பட்சணங்கள் போல் மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்பார் முக்கூர் சுவாமி என்றார் சீனிவாசன். இந்த யக்ஞ குண்டம் இன்றும் பாதுகாக்கப்படுகிறது. அதன் அருகில் தற்போது பவித்ர உற்சவம் நடந்து முடிந்து மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்ந்தது கண் கொள்ளாக் காட்சி. இந்த ஷேத்திரப் பெருமையினை முக்கூர் சுவாமிகள் எழுதிய ‘மட்டபல்லியில் மலர்ந்த மறைபொருள்’ என்ற புத்தகத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.
                                
"எண்ணிலா அருந்தவர்களான முனிவர்கள் பலர் மகிழ்ந்துறைந்தது இம்மட்டபல்லி மஹா ஷேத்திரத்தில்தான். மஹரிஷி வசிஷ்டர் மட்டபல்லி நரஹரியை வலம் வந்து வலமும், வளமும் பெற்று மகிழ்ந்தார். அத்திரி மஹரிஷியின் ஆழ்ந்த தபஸ் அவனை ஆட்கொண்டது. ப்ருகு மகரிஷியின் பெருமை மிகு பக்திக்கு க்ருஷ்ணவேணியைப் போல் பெருகி ஓடி வந்தான் நம் மட்டபல்லி நரஹரி. ஸ்ரீகெளதம மஹரிஷி இவனைப் போற்றி மகிழ்ந்தார். ஸ்ரீகாச்யப மஹரிஷி போற்றும் கனககசிபுஹரன் இவன். ஸ்ரீவத்ஸ மஹரிஷி மிகுந்த வாஸ்சல்யத்துடன் இவனது பெருமையைப் பலகாலும் பேசினார். ஸ்ரீவாதூல மஹரிஷி, ஸ்ரீஜமதக்னியின் வேள்விச் சுடரே இவன். ஸ்ரீவிஸ்வாமித்ரர் விரும்பிய விச்வநாதன் இவன். ஸ்ரீ மார்கண்டேய மகரிஷி மகிழ்ந்து பாடிய பரமன் இவன்” என்கிறார் முக்கூர். மட்டபல்லியில் சுயம்புவாகத் தோன்றிய நரசிம்மரை அனுபவித்து வர்ணிக்கிறார் ஸ்ரீலஷ்மி நரசிம்மாச்சாரியார்.