book

கண்ணன் கனியமுதம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருமுருக கிருபானந்தவாரியார்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :148
பதிப்பு :9
Add to Cart

இந்த நூல் கண்ணன் கனியமுதம், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பரிட்சித்து மன்னன் மரணத் தறுவாயில் ஏழுநாள் சுகமுனிவர் கூறக் கேட்டு முத்தி நலம் பெறச் செய்தது கண்ணன் கனியமுது. கண்ணபிரான் பூபாரம் தீர்க்கத் திருவவதாரம் செய்தவர். இவருடைய இனிய வரலாறு கனியமுதம் போன்றது. பவப் பசியை மாற்றும்; பரகதியில் ஏற்றும். ஒவ்வொரு பகுதியும் படித்தோர்க்குப் பெருமகிழ்ச்சியைத் தரவல்லது கண்ணன் கனியமுது. கோகுலம் என்ற தண்டமிழ்ப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதினேன். இதனைத் தனியே மக்கள் படித்து இன்புறும் பொருட்டு திரு.ஏ.திருநாவுக்கரசு அவர்கள் தமது வானதி பதிப்பகத்தில் அழகாக வெளியிடுகின்றார். வானதி பதிப்பகம் தனக்கே உரிய அரிய அழகு ஓவியமாக வெளியிடுகின்றது. கோகுலம் வெளியீடு அதிபர். திரு.சதாசிவம் அவர்கட்கும், வானதி பதிப்பகத்து அன்பர்கட்கும் எனது உள்ளம் நிறைந்த நன்றி. வானோரும் போற்றும் இதனை ஏனோரும் ஓதிக் கண்ணன் கருணையைப் பெறுவார்கள்.