book

ஒரு நோர்வே தமிழரின் அருமையான அனுபவங்கள்

Oru Norway Thamizharin Arumaiyaana Anubavangal

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நல்லையா சண்முகப்பிரபு
பதிப்பகம் :மணிமேகலை பிரசுரம்
Publisher :Manimegalai Prasuram
புத்தக வகை :பொது
பக்கங்கள் :500
பதிப்பு :1
Published on :2007
Out of Stock
Add to Alert List

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடம் உள்ள தமிழ்ப் பற்று அதிகம். அதிலும் படைப்புத் திறன் மிக்கவர்களிடம் அதன் ஆழமும் சொற்பிரயோக வீச்சும் மிக அதிகம்; வலிமையானதும் கூட. இதை மெய்ப்பிக்கும் விதமாகவே இந்த நூலும் அமைந்துள்ளது. என்.எஸ்.பிரபு என இலக்கிய உலகம் நட்புரிமையுடன் கொண்டாடும் இனிய மனிதர் நல்லையா சண்முகப்பிரபு ஒரு கவிஞர், எழுத்தாளர், "சர்வதேசத் தமிழர்' எனும் இதழ் மூலம் உலக அளவில் தமிழர்களை ஒருங்கிணைக்கும் நற்பணி புரியும் பத்திரிகையாளர். மதம், அரசியல், நாட்டு நடப்பு, வரலாற்றுச் செய்திகள் என ஏராளமான விஷயங்களில் தன் பார்வைப் பதிவுகளாக யாத்த கவிதைகளை இந்நூலில் தொகுத்தளிக்கிறார். யாழ்ப்பாணத்தின் புகழ், திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அப்துல்கலாம், எம்.ஜி.ஆர்., பற்றிய கவிதைகள் இவரின் கவித்துவமிக்க எழுத்தாற்றலுக்கு சான்று பகிர்கின்றன.