பத்துப்பாட்டு பட்டினப்பாலை நெடுநல்வாடை மூலமும் உரையும்
Pathupaattu Patinapaalai Nedunalvaadai Moolamum Uraiyum
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் கதிர் முருகு
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :69
பதிப்பு :2
Published on :2011
Out of StockAdd to Alert List
எட்டுத்தொகை நூல்களில் காணப்படும் அகவற்பாக்கள் தம்மளவில் முழுமையாய் நின்றாலும், எந்தப் பாடலையும் ஒரு தனிநூல் என்று கூறுமளவிற்கு அமைப்பு முறையால் விரிந்து நிற்பதாகக் கூறமுடியாது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சியைப் புலப்படுத்தி நிற்கும் தன்னுணர்ச்சிப் பாடல்களாகவே அவை காணப்படுகின்றன. ஆனால் பத்துப்பாட்டில் காணப்படும் பாடல்கள், அவை ஒரு தொகுப்பு நூலுக்குள் அடங்கியிருந்தாலும், ஒவ்வொன்றும் தன்னளவில் ஒரு தனி முழுநூலாகவே காணப்படுகின்றது. ஒரு தனி நூலுக்கு இருக்க வேண்டிய பொருளமைதி, தொடக்கம், வளர்ச்சி, முடிவு, முழுமையுணர்ச்சி முதலியவற்றை ஒவ்வொரு நூலிலும் காணமுடியும். எனவே அளவால் நீண்டு, தம்மளவில் முழுமை பெற்ற பத்துப் பாடல்களே பத்துப்பாட்டு என்ற பெயரில் தொகுக்கப் பெற்றுள்ளன