book

ஓ பாவிகளே நாடகம்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்துவேலழகன்
பதிப்பகம் :கார்முகில் பதிப்பகம்
Publisher :Kaarmugil Pathippagam
புத்தக வகை :இயல்-இசை-நாடகம்
பக்கங்கள் :137
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

'ஓடும் மின்னல் கீற்று போல் உள்ளத்தில் பட்டதையெல்லாம் சொல்லி வைப்பேன்! இலக்கியத்தில் திசைவழியா? வரம்புக்கு உட்பட்ட வாழ்க்கை ஓட்டமா? புதிய மனிதனின் செயல்களுக்குப் பொலிவூட்டும் சிந்தனையா? இவற்றைக் கேட்பவர்களை, ஒதுக்கித் தள்ளுங்கள்.. ஒதுக்கித் தள்ளுங்கள்!' என்ற ஓலக் குரலோடு, பேனா ஓட்டத் துணிந்து விட்ட படைப்பாளிகளே..
நீங்களே முயன்றாலும் எதிர் காலத்தில் நீங்கள் கக்கிய விஷத்தை உங்களால் விழுங்க முடியாது. 'சமுதாயத்தைத் தூக்க விரும்புபவர்கள் ஜாக்கி வைத்துத் தூக்கட்டுமே!' என எக்காளமிட்டு நீங்கள் எழுதும் எழுத்துகளால் சமுதாயம் பாதிக்கப்படும்! சமுதாயத்தின் ஒரு அங்கமான நீங்களும் பாதிக்கப்படுவீர்கள்!
நீங்கள் எழுதும் ஒவ்வொரு எழுத்துக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும்! இல்லாவிட்டால்...
ஓ..பாவிகளே! காலத்தால் நீங்கள் கணக்குத் தீர்க்கப்படுவீர்கள்.