book

மகா கலைஞன் மதுரை சோமு

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :திருச்சி செல்வேந்திரன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :186
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

தமிழ் மூதறிஞர் வாழ்வும் வாக்கும் என்ற தொடர் சொற்பொழிவின் 342 ஆவது பொழிவில் இசைப் பேரறிஞர் டாக்டர் மதுரை சோமுவின் வாழ்வும் சாதனைகளும் பற்றி வேசுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ் முதறிஞர் என்ற நிலையில் மதுரை சோமு எப்படி இடம் பெறலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழிசை எனப்பெறும் கர்நாடக இசையால் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தவர். மருதமலை மாமணியே முருகையா' என்ற பாடலின் மூலம் உலகம் கொண்டாடும் இசைக் கலைஞராக மாறியவர். அவர் படித்தது 9 ஆம் வகுப்பு மட்டுமே. ஆனால் இசைத் தறையில் 'பத்மஸ்ரீ', 'கலைமாமணி','இசைப் பேரறிஞர்' ஆகிய பட்டங்களை ஒருங்கே பெற்ற தமிழ் மக்கள் கொண்டாடும் தமிழ் முதறிஞராக, தமிழிசைப் படைப்பாளியாக இன்றைக்கும் அனைவராலும் குறிப்பிட்டு பேசக் கூடிய உலக மகா இசைக் கலைஞராக நம்மிடையே திகழ்கிறார்.