book

பெண்மையைப் போற்றும் பாரதி

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. சந்திரசேகரன், ப. சரவணன்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :76
பதிப்பு :2
Published on :2018
Add to Cart

மகாகவி பாரதியார் பெண்மை வாழ்க என்றும், பெண்மை வெல்க! என்றும் கூத்தாடியவர்; பெண் விடுதலைக்காகக் கும்மி வடிவில் குரல் கொடுத்தவர்; காற்றே! துன்பக் கேணியிலே எங்கள் பெண்கள் அழுத சொல் மீண்டும் உரையாயோ? என்று பிஜித் தீவில் கரும்புத் தோட்டத்தில் பணிபுரியும் இந்தியப் பெண்களின் அவல நிலையைக் கருணை உள்ளத்தோடு எழுத்தில் வடித்தவர்; புதுமைப் பெண்ணைப் படைத்துத் தம் கவிதையுலகில் உலா வரச் செய்தவர்; பாஞ்சாலி சபதத்திற்கு முதன்மை தந்து ஒரு தனிக்காவியம் படைத்தவர்; பாரத மாதாவுக்கு நவரத்தின மாலையும், திருப்பள்ளியெழுச்சியும், திருத்தசாங்கமும் இயற்றியவர். தமிழ்த் தாயாக இருந்து தம் மக்களை எட்டுத்திக்கும் சென்றிடுமாறும் புதிய சாத்திரம் படைக்குமாறும் ஆணையிட்டவர்; ஸரஸ்வதி, லட்சுமி, மாகாளி, பராசக்தி, முத்துமாரி, கோமதி முதலான பெண் தெய்வங்களின் திருப்புகழைத் தம் தோத்திரப் பாடல்களில் நெஞ்சாரப் போற்றிப் புகழ்ந்தவர்; சுதந்திர தேவியினைத் தொழுது வணங்கியவர்; பாரதி அறுபத்தாறில் பெண் விடுதலை பற்றிப் பேசியவர்; தையலை (தையல்= பெண்) உயர்வு செய்! என்று புதிய ஆத்திசூடி புனைந்தவர்.