book

நெடுஞ்சாலை விளக்குகள்

Nedujasalai Vilakugal

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப.க. பொன்னுசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :351
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123425542
Add to Cart

தேசிய நெடுஞ்சாலையில், விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில், விபத்து, உயிரிழப்புகள் தொடர்கின்றன.
மாதவரம் ரெட்டை ஏரி முதல், புழல் காவாங்கரை, "சிக்னல்' வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், 6 கி.மீ., தூரத்திற்கு அமைக்கப்பட்டு உள்ள, நூற்றுக்கும் மேற்பட்ட மின் விளக்குகள், கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. போக்குவரத்து நெரிசல் மிகுந்த அச்சாலை தற்போது, இருளில் மூழ்கி உள்ளது.இந்தப் பகுதியில், புழல் சிறை, தமிழக அரசு வணிகவரித்துறை சோதனைச் சாவடி ஆகியவை உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், இந்த வழியாக செல்கின்றன. இரவு நேரங்களில் சாலையை கடக்கும் சிலர், வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.
மாதக்கணக்கில் நீடிக்கும் இதுபோன்ற பிரச்னை குறித்து, போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது, ""சாலையின் அவசிய தேவையான விளக்குகள், மின் கட்டணம் உள்ளிட்ட பிரச்னைகளால், அவ்வப்போது இயங்குவது இல்லை. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.