பலர் விவசாய நிலத்தை விற்றுவிட்டு வேறு தொழில்களைச் செய்ய விரும்புகிறார்கள். விதைப்பது நிலத்தில் பார்ப்பது வானத்தை விவசாயியின் வாழ்க்கை வெற்று வாழ்க்கை ஆவதைக்கண்டு கொதித்து வெற்றி வாழ்க்கையாக அமைய ஆசைப்படுகிறார். சிலர் அழுக்குப் படாத வேலை செய்ய ஆசைப்படுகிறார்கள். இவர்களை கண்டு ஆசிரியர் ஆதங்கப்படுகிறார்.
அறிவியல் கண்டுபிடிப்புகளால் விவசாயத்துக்குச் சில ஆபத்துக்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார். அறிவியல் ஆராய்ச்சி வளரும்போது நோய்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றன என்று பெரிதும் வருந்துகிறார். நன்மைகள் பெருகவும் தீயவை அழியவும் இளைஞர்களின் பங்களிப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது என்று அவர்களுக்கு இந்நாவல் மூலம் அறைகூவல் விடுகிறார்.