book

என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்?

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.சி. மோகன்தாஸ்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

இன்றைய இந்தியர்களில் சிலரிடம் இந்தியா குறித்து தாழ்வு மனப்பான்மை நிலவுகிறது. இது நாளடைவில் வளர்வதற்குக் காரணம், பலர் எதிர்மறைச் சிந்தனையாளராக உள்ளதுதான். இவர்கள் எப்போதும் எதையாவது எதிர்த்துக்கொண்டே இருப்பதும், பிறரைக் குறைசொல்லிக்கொண்டே இருப்பதும் கடமையாகக் கொண்டிருப்பார்கள். இப்படியான எதிர்மறை மனிதர்களிடம் இருந்து நாம் சற்று விலகியிருந்தாலே போதும். 
எண்ணம்தான் வாழ்க்கையாகிறது. நமது எண்ணத்தில் எப்போதும் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் சந்திக்கும் நபர்களின் நேர்மையான போக்கு ஆகியவை தற்கால தேவைகள். இவ்வளவு மக்கள் தொகை இருக்கிறது நம்மால் ஒலிம்பிக்கில் ஒரு தங்கம்கூட வாங்க முடியவில்லை எனப் புலம்பிக் கொண்டிருந்தார்கள். 
அடுத்தடுத்து பதக்கங்கள் வாங்க ஆரம்பித்தவுடன், இவ்வளவு பெரிய நாட்டிலிருந்து இவ்வளவு வீரர்கள் பங்கேற்று சில பதக்கங்கள் மட்டுமே பெறமுடிந்தது எனக் கேலி பேசுவார்கள்.
ஒவ்வொரு மனிதனும் அவன் வாழும் நாட்டைப் பற்றி முழுமையாக முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.