book

பாராசாரியம் திசா புத்தி பலன்கள்

Paaraasaariyam

₹145+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்தியபாமா காமேஸ்வரன்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788184464917
Add to Cart

சேராத நாசமுறும் வாக்குடன் செல்வம் செகராசர் பிரீதியுடன் போசனவி சேடம் வாராத ஆபரணம் வந்து மிகச் சேரும்வாகனமும் வரும் புத்திர மித்திரர்சுகம் உண்டாம் பேராகப் பூமியோடு புதுக்கிரகம் உண்டாம்பின்புமிகு சவுக்கியமும் அதிகபலம் சேரும் கூராரும் வேலினையும் வாளினையும் பழித்துக் குலவுவிழி மடமயிலே! குறித்தனர்கற் றோரே.(இ.ள்) கூர்மையான வேலினையும் வாளினையும் பழிக்கின்ற, குலவுகின்ற விழிகளையும் மயில்போன்ற சாயலையும் உடைய இளமையான பெண்ணே சந்திரன் கெடாமல் இருந்தால் அவன் புத்தியில் தீயபலன்கள் வந்து சேராது. செல்வாக்குடன் செல்வம் நிறைந்திருக்கும். அரசாங்கத்தால் நன்மை ஏற்படும். சுவையான உணவுகள் உண்பான், பொன் ஆபரணங்கள் கிடைக்கும். புதிய வாகனங்கள் வந்து சேரும், புத்திரர்களாலும் ந
ண்பர்களாலும் நன்மைகிட்டும். நிலங்கள் வாங்குவதோடு, அழகான வீடு கட்டுவான் இச்சாதகன். மேலும் இவனுக்கு மிகுந்த நன்மைகளும் வல்லமையும் வந்து சேரும் என்றவாறு.